Saturday, July 2, 2022

"என்னைப் பின்பற்றிவா"

"என்னைப் பின்பற்றிவா"

“…பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.” – மத்தேயு 19:21 

முதல் உலகப்போர் நடந்த நாட்களில் மரித்தவர்களும் காயப்பட்டவர்களும் ஏராளமான பேர். ஏறக்குறைய ஒரு கோடி வீரர்கள் முதல் உலக மகாயுத்தத்தில் மரித்திருப்பார்கள் என்றும், இரண்டு கோடி சாதாரணமான மக்கள் பலியாகியிருப்பார்கள் என்றும் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. ஜெர்மன் தேசத்தின் சர்வாதிகாரியான ஹிட்லர் யுத்தத்திற்கு தன் படையை தலைமை தாங்கி நடத்திச் சென்றான். அவனுடைய ஒவ்வொரு பேச்சும் வாலிபர்களை ஊக்கப்படுத்துகிறதாயிருக்கும். அவன் பேசப்பேச வாலிபரின் நரம்புகள் முறுக்கேறும். இரத்தம் துடிக்கும். முடிவில் பின்பற்றுங்கள் என்று சொல்லும்போது அவர்கள் வீட்டை மறந்து, பெற்றோரை மறந்து, கண்மூடித்தனமாக அவனைப் பின்பற்றி யுத்தத்திற்கு செல்வார்கள். அதன் நிமித்தம் முதல் உலகப்போரில் அநேகர் மரித்துப் போனார்கள். 

இயேசு கிறிஸ்துவும் நம்மைப் பார்த்து என்னைப் பின்பற்றி வாருங்கள் என்று சொல்லுகிறார். அவருடைய வழி நித்திய ஜீவ வழி. அந்த வழி பரலோக ராஜ்யத்திற்கு நேராய் உங்களை கொண்டு செல்லும். அவர் தேசத்தலைவர்களைப் பார்க்கிலும் ராஜாக்களைப் பார்க்கிலும் மிகப் பெரியவர். உலகத் தலைவர்களின் வார்த்தைகள் மாறிப்போகும். ஆனால் இயேசுவின் வார்த்தை நித்தியமானவை, சத்தியமானவை. பரிசுத்த வேதாகமத்தில் இயேசுவை பின்பற்றினவர்களின் வாழ்க்கையை நாம் பார்க்கும்பொழுது ஆண்டவர் செய்த நன்மைகள் ஏராளம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! யாரை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? அரசியல் தலைவர்களையா, சினிமா நடிகர்களையா, விளையாட்டு வீரர்களையா சற்று சிந்தித்துப் பாருங்கள். உலக மனிதர்கள் உங்களை எளிதில் ஏமாற்றிவிடலாம். ஆனால் உங்களை எப்போதும் ஏமாற்றாத ஒருவர் உண்டு. அவர்தான் இயேசு கிறிஸ்து. அவரை பின்பற்றினவர்களுக்கு ஆண்டவர் வாக்குப்பண்ணி செய்த நன்மைகளும், செய்யப் போகும் பிரதிபலன்களும் வியக்கப்படத்தக்கவைகள். அவரை பின்பற்ற உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது  அவர் உங்களுக்கு அருமையான, மேன்மையான ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.